search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ் மருத்துவமனை"

    • சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
    • டாக்டர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

    சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் நாகராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன், தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நெறிமுறை குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதா வது:-

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.
    • நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் இன்று காலமானார். நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.

    மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
    • கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது.

    ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவை மீண்டும் பயமுறுத்திய புதிய கொரோனா பரவல் 10 நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

    அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வைரஸ் தாக்கம் தற்போது சற்று அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் உச்சம் தொட்டதை ஆய்வு செய்து உள்ள சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவிலும் கடந்த கால கொரோனா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போதைய பி.எப்-7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாற வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த போதெல்லாம் 30 முதல் 35 நாட்களுக்குள் அதன் பிரதிபலிப்பு இந்தியாவில் எதிரொலித்தபடி இருந்தது.

    இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த மாதம் இந்தியாவில் பி.எப்-7 ரக வைரஸ் சற்று அதிகமாக மக்களிடையே பரவக்கூடும். அதனுடைய அறிகுறிகள் முன்பு போல மிக பயங்கரமாக இருக்காது. சாதாரண ஜலதோஷம் போலத்தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எப்-7 உள்ளிட்ட தற்போது பரவிக் கொண்டிருக்கும் 4 விதமான வைரஸ்கள் ஒமைக்ரான் தொடக்க கால வைரஸ்கள் போல சக்தி வாய்ந்தவை அல்ல. தற்போதைய வைரஸ்கள் அனைத்தும் வீரியம் குறைந்தே பரவி வருகின்றன. எனவே இது புது கொரோனா அலையாக உருவெடுக்காது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள சீனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி விட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் விலக்கி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதை சர்வதேச அளவில் சீனா உறுதிப்படுத்தி இருக்கிறது.

    சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த 6 ஆயிரம் பேரில் 38 பேருக்கு மட்டும்தான் லேசான கொரோனா தாக்கம் இருந்தது. அந்த 38 பேருக்கும் பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வைரஸ் பரவல் இல்லை என்பதும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

    என்றாலும் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில்தான் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அடுத்த 30 நாட்களில் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இந்தியாவிற்குள் புதிய கொரோனா பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பால் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. எனவே புதிய அலை வர வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள், 3 லட்சத்து 20 ஆயிரம் நர்சுகள், 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
    • விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌ அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாடா ளுமன்றத்தேர்தலை முன்னிறுத்தி மேற்கொ ள்ளப்படவில்லை. நாடு முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியே பாதயாத்திரை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை போல் அனைத்து பதவிகளும் நியமன பதவிகளாக இருக்கக் கூடாது என்பதே காங்கிரசின் அடிப்படை நோக்கமாகும்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உண்மையில் இந்த திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் தான் அடிக்கல் நாட்டிருக்க வேண்டும்.

    இமாச்சல பிரதேசத்தில் 2015-ம் ஆண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பணிகள் முடிந்து அதனை தற்போது அவர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஜப்பான் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது நிதி மதிப்பீடு மாறும் போது அதை அனுமதிக்க காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, நலவாய் பாண்டியன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் ஆகிய உடன் இருந்தனர்.

    • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் 224 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு, 1500 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டியில் அ.தி.மு.க. டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-

    தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் இன்று மதுரைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தங்களது தந்தையார் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை ஆய்வு செய்ததாக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் இந்த நூலகத்தை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் மதுரையில் அடையாளங்க ளில் ஒன்றாக இருக்கின்ற சிம்மக்கல் மைய நூலகம் பராமரிப்பின்றி இடிந்து விழுந்து இருக்கின்ற சூழ்நிலையில் உள்ளது. அதுவும் முதலமைச்சர் தந்தையார் சிலை அருகே அமைந்திருக்கின்ற அருகே தான் இந்த சிம்மக்கல் மைய நூலகம் அமைந்துள்ளது.

    ஆகவே இந்த நூலகத்தின் பழம்பெருமையை காப்பா ற்றும் வகையில் முதல மைச்சர் சிம்மக்கல் நூலக த்தில் முக்கியத்து வத்தை உணர்த்தும் வகையில் அதை ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்

    புரட்சித்தலைவி அம்மா வின் கனவை நனவாக்கும் வண்ணம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.சும் தொடர்ந்து பாரத பிரதமரிடம் அழுத்தம் கொடுத்தனர். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 224 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு, 1500 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

    ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் அந்த வளாகத்தை முதலமைச்சர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என்பது மக்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்பு ஆகும்.

    முதலமைச்சர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து ஏறத்தாழ 10 முறை மதுரைக்கு வந்துள்ளார். இதில் ஒருமுறையாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு இருந்தால் அதன் முக்கியத்துவத்தை அதன் மூலமாக அரசு அலுவலர்கள் எடுத்து வைப்பதற்கு சிறப்பாக இருந்து இருக்கும்.

    திட்டங்களை கள ஆய்வு செய்வது மூலமாகத்தான் அதை நாம் விரிவுபடுத்தி முழுமைப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தினை முதலமைச்சர் ஆய்வு செய்வாரா ? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    முல்லைப்பெரியாறு அணை குறித்து உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதனால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. #AIIMS #TNCabinet
    சென்னை:

    மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்மஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு, இன்னும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், இதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

    மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டும் பணி, நிதி ஒதுக்கீடு, கட்டுமானப்பணிகள் முடிக்க கால வரையறை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
    பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை எனவும், 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவே இல்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. #AIIMS
    புதுடெல்லி:

    பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது. 

    குறிப்பாக 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

    இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பெற்றுள்ள தகவலில், தமிழகத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.


     
    இதேபோன்று பிற மாநிலங்களில் திட்டத்தை முன்னெடுக்க ஆகும் தொகை எவ்வளவு? வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 1000 கோடிக்கும் அதிகமான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக ரூ. 278.42 கோடி மேற்கு வங்காளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்யாணியில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ரூ. 1,754 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ரூ. 278.42 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், இவ்விவகாரத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்றால் மட்டுமே திட்டமிட்டப்படி மருத்துவமனையை கட்டியமைக்க முடியும். இதேபோன்றுதான் பிற மாநிலங்களுக்கான அறிவிப்பும் உள்ளது. பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்த இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #AIIMS
    மதுரை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த 14-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இதனை அடுத்து, விசாரணையில் இருந்த மேற்கண்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 
    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தெரிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரத்துறை மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #AIMS
    மதுரை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 
    ×